தமிழரின் திருப்புமுனை

தமிழர்கள் மற்றவர்க்கு அடிமையானது ஏன்

admin's picture

தமிழர் அடிமையானது ஏன்?​ எவ்வாறு?-க.ப.அறவாணன்;​ பக்.334 ;​ ரூ.100; தமிழ்க்கோட்டம்,​​ 2,​ முனிரத்தினம் தெரு,​​ அய்யாவு நாயுடு குடியிருப்பு,​​ சென்னை-600 029.

தமிழர்கள் மற்றவர்க்கு அடிமையானது ஏன்,​​ எவ்வாறு என்ற இந்த நூலில் ஆசிரியர் க.ப.​ அறவாணன் ஆய்வாளர்களுக்கே உரிய பாங்குடன் தனது கருத்தை விரித்துரைக்கிறார்.​ தமிழர்கள் கல்வி அறிவு இல்லாததாலும்,​​ பின்பற்றிய மதத்தாலும்,​​ பெண்ணடிமைக் கோட்பாட்டாலும்,​​ மன்னர்களுடன் தொடர்பில்லாததாலும்,​​ அநீதியை எதிர்த்துப் போராடாது அடங்கியமையாலும்,​​ தமிழ் மன்னர்களிடையே ஒற்றுமை இல்லாததாலும்,​​ காதல் மண வீழ்ச்சியாலும்,​​ வெள்ளை நிற மோகத்தாலும்,​​ ஆயுத பலவீனத்தாலும்,​​ புராதன வாகனங்களாலும்,​​ தகவல் தொடர்புக்கு வழி இல்லாததாலும் பிற இனங்களுக்கு அடிமைப்பட்டதாக ஆசிரியர் கூறுகிறார்.​ ​ ​இனியாவது தமிழர்கள்,​​ தங்களை ஏய்ப்பவர்களையே மீட்பர்கள் என்று கருதாமல் சுயநலத்தை விட்டு ஒற்றுமைப்பட்டு முன்னுக்கு வரமாட்டார்களா என்ற ஏக்கமே நூலின் இறுதியில் வெளிப்படுகிறது.​ மாணவர்கள்,​​ ஆசிரியர்கள் மட்டும் இன்றி தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே துய்க்க வேண்டிய நூல்.

User login

To prevent automated spam submissions leave this field empty.

செல்லாவின் ஓசை

கவிதை எங்கள் மூச்சு

Who's online

There are currently 0 users and 25 guests online.

Syndicate

Syndicate content