மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

0
8750

விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) காலை கிளிநொச்சியில் இடம்பெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பொது உருவப் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here